![]() |
சைலேந்திர சிங் கவுர் மற்றும் அவரின் வாகனம் |
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 64 வயதான சைலேந்திர சிங் கவுர் என்ற விஞ்ஞானி, உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆறு-ஸ்ட்ரோக் (Six-Stroke) எஞ்சின் உருவாக்கியுள்ளார். இதன் சிறப்பம்சம் என்னவெனில், வெறும் 1 லிட்டர் பெட்ரோலில் 176 கிலோமீட்டர் வரை பைக் ஓடக்கூடிய திறன் கொண்டதாகும்.
பொதுவாக ஒரு சாதாரண 100cc பைக் அதிகபட்சமாக 60–75 கிமீ மைலேஜ் தருகிறது. ஆனால் கவுரின் இந்த கண்டுபிடிப்பு, எரிபொருளின் 70% சக்தியை பயன்படுத்தி மைலேஜ் இரட்டிப்பாக மட்டுமின்றி, மாசுபாட்டையும் பெரிதும் குறைக்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்த எஞ்சின் பெட்ரோல் மட்டுமின்றி டீசல், சிஎன்ஜி, எத்தனால் போன்ற பல்வேறு எரிபொருட்களிலும் இயங்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
முக்கியமாக, இந்திய அரசாங்கம் அவரது கண்டுபிடிப்புக்காக இரண்டு காப்புரிமைகள் (patents) வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக தனது சொத்துக்களையே விற்று ஆராய்ச்சி செய்து வந்த கவுர், இறுதியாக தனது கனவினை நனவாக்கியுள்ளார்.
0 Comments