மக்கள் அறிவுக்கு இல்லம்: 75 வயதான அங்கே கவுடாவின் அர்ப்பணிப்பு!



Pic: அங்கே கவுடா

கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த 75 வயதான அங்கே கவுடா, தனது வாழ்நாளையே புத்தகங்களை சேகரிப்பதற்காக அர்ப்பணித்துள்ளார். இளமைக் காலத்திலிருந்தே புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கிய அவர், பேருந்து நடத்துனராகவும் பின்னர் சர்க்கரை ஆலையில் பணியாற்றியும் சம்பாதித்த பணத்தை முழுவதும் இந்த ஆர்வத்திற்காகவே செலவிட்டார்.


தனது இல்லத்தையே விற்று, ‘புஸ்தக மனை’ (புத்தக வீடு) என்ற பெயரில் சுமார் 20 இலட்சம் புத்தகங்களைக் கொண்ட மிகப்பெரிய நூலகத்தை நிறுவியுள்ளார். இதன் சிறப்பு என்னவெனில் – எந்தவித உறுப்பினர் கட்டணமும் இல்லை, நுழைவு கட்டணமும் இல்லை. அனைவருக்கும் இலவசமாக திறந்துவைக்கப்பட்ட இந்த நூலகம், அறிவு தேடும் ஒவ்வொருவருக்கும் திறந்த வாசலாக உள்ளது.


இந்த நூலகத்தில் அரிய வெளிநாட்டு நூல்கள், ஆயிரக்கணக்கான அகராதிகள் மற்றும் பல்வேறு மொழிகளில் வெளிவந்த முக்கியமான நூல்கள் அடங்கியுள்ளன. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதியவர்கள் மட்டுமல்லாமல், நீதிமன்ற அதிகாரிகள் கூட இங்கு வந்து பயன்பெறுகின்றனர்.


அங்கே கவுடாவின் அர்ப்பணிப்பு, தனிப்பட்ட சொத்துக்களைத் தியாகம் செய்து சமூக அறிவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரிய உதாரணமாக திகழ்கிறது.


Post a Comment

0 Comments