![]() |
| Pic: Ajithkumar Racing |
தமிழ் சினிமா நட்சத்திரம் அஜித் குமார் தலைமையிலான ரேசிங் அணி, ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா 24 மணி நேர போட்டியில் மொத்தத்தில் நான்காம் இடத்தையும், AM வகுப்பில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
அஜித், தனது கூட்டணியினரான ரால்ஃப் போப்பிலார்ஸ், ஹூப் வான் ஐன்ட்ஹோவன், கேமரன் மெக்லியோட், கிரெகோரி செர்வெய்ஸ் ஆகியோருடன் இணைந்து கடினமான போட்டியில் இந்தியக் கொடியை உயர்த்தினார்.
கரூர் சம்பவத்தையொட்டி கொண்டாட்டங்களை மிகுந்த அடக்கத்துடன் நடத்த தீர்மானித்த அஜித், தனது அணியினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னை ஆதரித்து வரும் மனைவி ஷாலினிக்கும் அவர் சிறப்பு நன்றியை கூறினார்.
இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற 24 மணி நேர போட்டியிலேயே மீண்டும் மோட்டார் விளையாட்டில் ஈடுபட்ட அஜித், “இது இந்திய மோட்டார் விளையாட்டுக்கு பெரிய ஊக்கம் தரும்” என தெரிவித்துள்ளார்.

0 Comments